Friday, June 18, 2010
Friday, March 19, 2010
மேற்கே முறையே கொழும்பு, மொனராகலையிலிருந்து வடக்கே கல்முனை, அக்கரைப்பற்றிலிருந்தும் வந்தப்படி கிழக்கிலங்கையில் பொத்துவில் நகரில் ஒன்றிணையும் பிரதான வீதி அண்மையில் அகலமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ்விதி தென்பக்கமாக பொத்துவில்லூடாக பாணமை வரை சென்று நிறைவுறுகின்றது.
பிரதான வீதி வழியாக பொத்துவில் நகரில் நுழையும் போது முதன் முதலில் அப்பாதையின் இடது புறத்தே கிறிஸ்தவ தேவாலயம், அதிலிருந்து அப்பிரதான வழியாக 200 மீற்றர் முன்னே நகரின் உள் நோக்கிச் செல்ல வலது புறத்தே ஆலையடி பிள்ளையார் தலமும், அதிலிருந்து மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல புத்த பெருமான் வீற்றிருக்கும் அரச மரத்து ஆலயமும், மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல நகரின் பொதுச் சந்தைப் பள்ளிவாசளை ரஹ்மானியா பள்ளிவாசலும் என இயற்கையாகவே சிறப்பாக அமைந்து, நான்கு மதங்களையும் பின்பற்றி வாழும் இப்பிரதேச மக்களை மேலும் அன்னியோன்யப்படுத்திக் கொண்டிருக்கின்றமை பொத்துவில்லுக்குத் தனிப் பெருமையாகும்.
இங்குதான் த ரேட் போய் படப்பிடிப்பு இடம்பெற்றது.
இது பொத்துவில் கடற்கரை, மண்மலை, களப்புக்கட்டு, பொதுச்சந்தை, பிரதான வீதி போன்ற இடங்களில் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பொத்துவில் வாழ் மக்களும், மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படமும்..
ஆரம்பத்தில் இதன் படப்பிடிப்பிற்கு இப்பிரதேச மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர் எனலாம். காரணம் திரைப்படம் பற்றிய அவர்கள் கணிப்பீடு வேறு விதம் என்றே எண்ணத்தோன்றுகிறது. காரணம் இன்றைய திரைப்படங்கள் அந்தப் போக்கை மக்கள் மனதில் விதித்துள்ளன என்பதே உண்மை.
ஆனால் மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படம் அதேகனம் அந்நக்கணிப்பீட்டை அவர்கள் மத்தியில் தவிடு பொடியாகிவிட்டது என்பதே நிஜம்.
ஆரம்பத்தில் எந்தவித ஒத்துழைப்பு வழங்காமல் தூர இருந்து ஓரக்கண்ணால் நோக்கிய இவர்கள் இதன் கதையமைப்பு, கதையோட்டம், கலாசாரம் போன்றவற்றைக் கண்டு பிரம்மித்து நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் மக்களுக்கு குறி;ப்பாக இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் வெளிப்படுத்தும் கருத்து அவர்களைப் படப்பிடிப்பின் போதே கவர்ந்துவிட்டது. மறுகனமே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு உதவுவதற்கென்றே ஒரு குழுவினர் உடனே உசாராகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு நிறைவுறும் வரை பாரிய ஒத்துழைப்பை பலரும் வழங்கினார்கள். இப்போது இத்திரைப்படம் எப்போதும் வரை என்ற பலத்தை எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதே இதன் வெற்றிச்சான்று! இது தவிர நடிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கும்படி இப்பிரதேச இளைஞர்களும், வாலிபர்களும் இயக்குநரிடம் சந்தர்ப்பம் கேட்டு நின்றதும் அவர்களின் மாற்று சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
சூரியன் உதயமாகும் கிழக்கிலங்கையின் வங்கால விரிகுடாக்கடல்! சர்வதேச உல்லாசப் பயணிகளின் உரைவிடம்! உள்ளுர் மக்களின் பொழுது போக்கு! அறுகம்பை என அழைக்கப்படும் அழகின் சிகரம்!
மணல் கொண்டு இயற்கையாகவே மலைபோல் அமைந்துள்ளதால் மண்மலை என அழைக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் அக்கம் அத்சயிக்கும் இடமாகவும், அழகியவை கண்முன் நிறுத்தும் அமைவிடமாகவும் இது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆரம்பக்காலத்தில் தற்போதை விடவும் இம்மண்மலை உயரமாகக் காணப்பட்டதும், தற்போது அதன் உயரம் குறைந்துள்ளதும் கவலையளிக்கிறது. இவ்விடயத்திலுள்ள மலை மனிதர்களால் அள்ளப்பட்டுச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்!
அறுகம்பைக் களப்பு என அழைக்கப்படும் இது சர்வதேச பெயர் பெற்ற ஒரு குடா. இக்களப்பை அண்மித்து இருமரங்கிலும் மக்கள் குடியிருப்பு அமைந்துள்ளதுடன், இப்பகுதி மக்களின் மீன்பிடித் துறைமுகமாகவும் திகழ்கிறது.
பிரதான வீதி வழியாக பொத்துவில் நகரில் நுழையும் போது முதன் முதலில் அப்பாதையின் இடது புறத்தே கிறிஸ்தவ தேவாலயம், அதிலிருந்து அப்பிரதான வழியாக 200 மீற்றர் முன்னே நகரின் உள் நோக்கிச் செல்ல வலது புறத்தே ஆலையடி பிள்ளையார் தலமும், அதிலிருந்து மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல புத்த பெருமான் வீற்றிருக்கும் அரச மரத்து ஆலயமும், மேலும் 200 மீற்றர் முன்னே செல்ல நகரின் பொதுச் சந்தைப் பள்ளிவாசளை ரஹ்மானியா பள்ளிவாசலும் என இயற்கையாகவே சிறப்பாக அமைந்து, நான்கு மதங்களையும் பின்பற்றி வாழும் இப்பிரதேச மக்களை மேலும் அன்னியோன்யப்படுத்திக் கொண்டிருக்கின்றமை பொத்துவில்லுக்குத் தனிப் பெருமையாகும்.
இங்குதான் த ரேட் போய் படப்பிடிப்பு இடம்பெற்றது.
இது பொத்துவில் கடற்கரை, மண்மலை, களப்புக்கட்டு, பொதுச்சந்தை, பிரதான வீதி போன்ற இடங்களில் படப்பிடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பொத்துவில் வாழ் மக்களும், மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படமும்..
ஆரம்பத்தில் இதன் படப்பிடிப்பிற்கு இப்பிரதேச மக்கள் பெரிதும் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர் எனலாம். காரணம் திரைப்படம் பற்றிய அவர்கள் கணிப்பீடு வேறு விதம் என்றே எண்ணத்தோன்றுகிறது. காரணம் இன்றைய திரைப்படங்கள் அந்தப் போக்கை மக்கள் மனதில் விதித்துள்ளன என்பதே உண்மை.
ஆனால் மஹ்ரூபின் த ரேட் போய் திரைப்படம் அதேகனம் அந்நக்கணிப்பீட்டை அவர்கள் மத்தியில் தவிடு பொடியாகிவிட்டது என்பதே நிஜம்.
ஆரம்பத்தில் எந்தவித ஒத்துழைப்பு வழங்காமல் தூர இருந்து ஓரக்கண்ணால் நோக்கிய இவர்கள் இதன் கதையமைப்பு, கதையோட்டம், கலாசாரம் போன்றவற்றைக் கண்டு பிரம்மித்து நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் மக்களுக்கு குறி;ப்பாக இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் வெளிப்படுத்தும் கருத்து அவர்களைப் படப்பிடிப்பின் போதே கவர்ந்துவிட்டது. மறுகனமே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு உதவுவதற்கென்றே ஒரு குழுவினர் உடனே உசாராகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு நிறைவுறும் வரை பாரிய ஒத்துழைப்பை பலரும் வழங்கினார்கள். இப்போது இத்திரைப்படம் எப்போதும் வரை என்ற பலத்தை எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றார்கள் என்பதே இதன் வெற்றிச்சான்று! இது தவிர நடிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்கும்படி இப்பிரதேச இளைஞர்களும், வாலிபர்களும் இயக்குநரிடம் சந்தர்ப்பம் கேட்டு நின்றதும் அவர்களின் மாற்று சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
சூரியன் உதயமாகும் கிழக்கிலங்கையின் வங்கால விரிகுடாக்கடல்! சர்வதேச உல்லாசப் பயணிகளின் உரைவிடம்! உள்ளுர் மக்களின் பொழுது போக்கு! அறுகம்பை என அழைக்கப்படும் அழகின் சிகரம்!
மணல் கொண்டு இயற்கையாகவே மலைபோல் அமைந்துள்ளதால் மண்மலை என அழைக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் அக்கம் அத்சயிக்கும் இடமாகவும், அழகியவை கண்முன் நிறுத்தும் அமைவிடமாகவும் இது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. ஆரம்பக்காலத்தில் தற்போதை விடவும் இம்மண்மலை உயரமாகக் காணப்பட்டதும், தற்போது அதன் உயரம் குறைந்துள்ளதும் கவலையளிக்கிறது. இவ்விடயத்திலுள்ள மலை மனிதர்களால் அள்ளப்பட்டுச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்!
அறுகம்பைக் களப்பு என அழைக்கப்படும் இது சர்வதேச பெயர் பெற்ற ஒரு குடா. இக்களப்பை அண்மித்து இருமரங்கிலும் மக்கள் குடியிருப்பு அமைந்துள்ளதுடன், இப்பகுதி மக்களின் மீன்பிடித் துறைமுகமாகவும் திகழ்கிறது.
உயர்தரம் கற்று, இலத்திரனியல் துறையில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் தொழில்நுட்ப பயிற்சியைத் தொடர்ந்தார். அதேகனம் திரைப்படத் தயாரிப்புத் தொழில்நுட்ப டிப்ளோமா படிப்பை நிறைவு செய்ததன் மூலம் திரைப்படத்துறைக்குள் கால்பதித்தார்.
அதன்மூலம் இவர் திரைப்படத்துறையில் சாதாரணமாக இன்றி தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், பரிசோதகராகவும் தன் ஆரம்பப் பணியைத் தொடங்கினார் என்றால் அது மிகையல்ல. அப்படி உயர் பணியுடனே தன் திரையுலகப் பிரவேசத் தொடர்ந்த இவரின் கை வண்ணத்திலேயே தான் இன்று இந்த த ரேட் போய் தயாராகியிருக்கிறது.
தனது கதை, திரைக்கதை, வசனத்திலும், இயக்கத்திலும் தயாரான கறுப்புக் கனவுகள் என்ற தன் முதற் திரைப்படத்தின் ஒளிப்பதிவை முடித்து விட்டு த ரேட் போய் என்ற தன் 2ஆவது திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார். அதற்காக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் தானே மேற்கொண்டார்.
இலங்கைத் திரைத்துறை வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் த ரேட் போய் பாரிய திருப்பங்களையும், மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்று திடமாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எதிர்பார்க்கலாம், காரணம் இதன் கதை, காலச்சாரம் எனப் பல இலங்கைத் திரைத்துறையில் புதியன எனலாம்.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிவரும் இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தென்றல் எவ்.எம் இன் திரைத்தென்றல் என்ற சர்வதேசத் திரைப்படத்துறை நிகழ்ச்சி ஒன்றிணையும் வழங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கிழக்கிலங்கையில் சிறுபராயம் முதலே மிகப் பிரபல்யம் பெற்ற கலைஞர். பல மேடை நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
பின் நாட்களில் மேடை நாடகங்கள் பலவற்றுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி நடித்து அதனால் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு வசதிகுறைந்த பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியவர் என்பதே இவரது கலை அர்ப்பணிப்புக்கும், சமூக சேவைக்கும் சிறந்த சான்று.
கலைத் தாகத்தால் காலப் போக்கில் வீடியோ நாடகங்கள், குறுநாடகங்கள் பலவற்றுக்கும் கதை வசனம் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கலைத்துறையில் அதீத ஈடுபாடு, ஆழ்ந்த அறிவு மற்றும் பக்தி கொண்டவர் என்பதும் குறிக்கோளுடன் அத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர் என்பதும் சிறப்பு.
ரி.எம்.சௌந்தராஜனின் கனீரென்ற கம்பீரமான குரலில் மிக மிக அற்புதமாகப் பாடி மக்களை ஆச்சரியப்படுத்தியர்! ஆச்சரியப்படுத்தியவர்! ஆச்சரியப்படுத்திக் கொண்டிருப்பவர்! என்பது அதனையும் விட சிறப்பானது.
இவர் பாடும் போது மக்கள் ஒருகனம் உரைந்து நிற்பவர் றிஸ்விதான் பாடுகிறார். என்பதை மறுத்து ரி.எம்.எஸ் இன் பாடலை பின்னணியான ஒலிக்க விட்டு விட்டு இவர் அதற்கேற்ப வாயசைக்கிறார் என்றே அடித்துச் சொல்வார்கள்.
அடுத்த கனம் நெரிசலைக் கிழித்துக் கொண்டு இவரின் கிட்ட நெருங்கி நின்று அவதானித்து பின் வாயில் விரல் வைத்து அவர்கள் அதேகனம் திகைத்து நிற்பர் என்பது இவரின் தனிச்சிறப்பு என்றால் அது மிகையல்ல!
அந்த அளவுக்கு இவரின் குரல், உச்சரிப்பு, மொழிப் பயன்பாடு, பாணி, பாவம், ஏற்ற இரக்கம், சுருதி என அனைத்துமே அற்புதம்.
இப்படி பாடகர், கவிஞர், எழுத்தாளர், கலைஞர், சமூக சேவையாளர் எனப் பல அவதாரம் கொண்டு மக்களி;ன் ஏகோபித்த அபிமானம் கலைஞரே எம்.எஸ்.எம்.றிஸ்வி.
பின் நாட்களில் மேடை நாடகங்கள் பலவற்றுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி நடித்து அதனால் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு வசதிகுறைந்த பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பொருளாதார ரீதியில் பெரிதும் உதவியவர் என்பதே இவரது கலை அர்ப்பணிப்புக்கும், சமூக சேவைக்கும் சிறந்த சான்று.
கலைத் தாகத்தால் காலப் போக்கில் வீடியோ நாடகங்கள், குறுநாடகங்கள் பலவற்றுக்கும் கதை வசனம் எழுதி, இயக்கி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கலைத்துறையில் அதீத ஈடுபாடு, ஆழ்ந்த அறிவு மற்றும் பக்தி கொண்டவர் என்பதும் குறிக்கோளுடன் அத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருபவர் என்பதும் சிறப்பு.
ரி.எம்.சௌந்தராஜனின் கனீரென்ற கம்பீரமான குரலில் மிக மிக அற்புதமாகப் பாடி மக்களை ஆச்சரியப்படுத்தியர்! ஆச்சரியப்படுத்தியவர்! ஆச்சரியப்படுத்திக் கொண்டிருப்பவர்! என்பது அதனையும் விட சிறப்பானது.
இவர் பாடும் போது மக்கள் ஒருகனம் உரைந்து நிற்பவர் றிஸ்விதான் பாடுகிறார். என்பதை மறுத்து ரி.எம்.எஸ் இன் பாடலை பின்னணியான ஒலிக்க விட்டு விட்டு இவர் அதற்கேற்ப வாயசைக்கிறார் என்றே அடித்துச் சொல்வார்கள்.
அடுத்த கனம் நெரிசலைக் கிழித்துக் கொண்டு இவரின் கிட்ட நெருங்கி நின்று அவதானித்து பின் வாயில் விரல் வைத்து அவர்கள் அதேகனம் திகைத்து நிற்பர் என்பது இவரின் தனிச்சிறப்பு என்றால் அது மிகையல்ல!
அந்த அளவுக்கு இவரின் குரல், உச்சரிப்பு, மொழிப் பயன்பாடு, பாணி, பாவம், ஏற்ற இரக்கம், சுருதி என அனைத்துமே அற்புதம்.
இப்படி பாடகர், கவிஞர், எழுத்தாளர், கலைஞர், சமூக சேவையாளர் எனப் பல அவதாரம் கொண்டு மக்களி;ன் ஏகோபித்த அபிமானம் கலைஞரே எம்.எஸ்.எம்.றிஸ்வி.
SCRIPT NET SL என்ற நிறுவனத்தில் ஒளிப்பதிவு, திரைக்கதை, படத் தொகுப்பு, இயக்கம் போன்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட இவர் பின் நாட்களில் அந்நிறுவனத்தின் பல குறுந்திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம் போன்ற துறைகளில் அடிப்படை அறிவையும், நுணுக்கங்களையும் இவர் பெற்றுக் கொண்டதால் ஒளிப்பதிவினை இவரால் மிகவும் சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் படத் தொகுப்பிலே அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வந்த இவர் எதிர்காலத்தில் ஒளிப்பதிவுத்துறையில் சிறந்த விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது முழுக் கவனத்தையும் தற்போது ஒளிப்பதிவுத் துறையிலேயே செலுத்தி வருகின்றார்.
த ரேட் போய் குறுந்திரைப்படத்திற்கு இவரே ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அதற்கமைய மிக சிறப்பாகவும், மிகத் திறம் படவும் தனது ஒளிப்பதிவுப் பணியை மேற்கொண்டதாக இதன் இயக்குநரும் தயாரிப்பாளருமான மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியத் தொலைக்காட்சியொன்றில் நெடுந்தொடர் (மெகா சீரியல்) நாடகம் ஒன்றிற்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயது முதலே இசைத்துறையில் அதீத ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட இவர் கணனி மூலம் நவீன இசைத் திறமையை தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் வெளியடுத்தி வருகின்றார்.
சர்வதேச அளவில் பல இசைத் தொகுப்புகளுக்கு இசையமைத்து புகழ் பெற்ற இவர் “மீதும் வெஸ்ஸே” என்ற இசைத் தொகுப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டார். யூனிவர்ஸல் மற்றும் ஈ-என்டர்டைன்மட் மூலம் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட இந்த இசைத் தொகுப்பின் இசைத் தட்டுக்கள் மிக அதிகமாக விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல பல தரப்பட்ட நாடகங்களுக்கும் இவர் இதுவரை இசையமைத்துள்ளார். அது தவிர சர்வதேச அளவில் பல விளம்பரங்களுக்கும், குறியிசைகளுக்கும் இசையமைத்துள்ள இவர் சர்வதேச தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் மிகுந்த அபிமானம் பெற்றவர் என்பது சிறப்பம்சமாகும்.
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வலையமைப்பின் கீழ் இயங்கும் சூரியன் எவ்.எம்மில் இவர் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருவதுடன், அதன் ஏனைய இணை அலைவரிசைகளான ஆங்கிலம் மற்றும் சிங்கள சேவைகளுக்கும் குறியிசைகளையும், விளம்பரங்களையும் அமைத்து தனது பங்களிப்பை விசாலமாக வழங்கி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற வானொலிகள் தரப்படுத்தலில் தற்போதுள்ள இலங்கை வானொலி இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த ஆர்வத்துடனும், முழு அர்ப்பணிப்புடனும் தற்போது இந்த த ரேட் போய் குறுந்திரைப்படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார் என பெருமிதப்படுத்துகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான மஹ்ரூப்.
சர்வதேச அளவில் பல இசைத் தொகுப்புகளுக்கு இசையமைத்து புகழ் பெற்ற இவர் “மீதும் வெஸ்ஸே” என்ற இசைத் தொகுப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டார். யூனிவர்ஸல் மற்றும் ஈ-என்டர்டைன்மட் மூலம் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட இந்த இசைத் தொகுப்பின் இசைத் தட்டுக்கள் மிக அதிகமாக விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல பல தரப்பட்ட நாடகங்களுக்கும் இவர் இதுவரை இசையமைத்துள்ளார். அது தவிர சர்வதேச அளவில் பல விளம்பரங்களுக்கும், குறியிசைகளுக்கும் இசையமைத்துள்ள இவர் சர்வதேச தமிழ் நெஞ்சங்கள் மத்தியில் மிகுந்த அபிமானம் பெற்றவர் என்பது சிறப்பம்சமாகும்.
ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வலையமைப்பின் கீழ் இயங்கும் சூரியன் எவ்.எம்மில் இவர் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருவதுடன், அதன் ஏனைய இணை அலைவரிசைகளான ஆங்கிலம் மற்றும் சிங்கள சேவைகளுக்கும் குறியிசைகளையும், விளம்பரங்களையும் அமைத்து தனது பங்களிப்பை விசாலமாக வழங்கி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற வானொலிகள் தரப்படுத்தலில் தற்போதுள்ள இலங்கை வானொலி இசையமைப்பாளர்களில் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த ஆர்வத்துடனும், முழு அர்ப்பணிப்புடனும் தற்போது இந்த த ரேட் போய் குறுந்திரைப்படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார் என பெருமிதப்படுத்துகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான மஹ்ரூப்.
கல்விப் பராயம் முதல் கலை ஆர்வம் கொண்ட பொத்துவிலைச் சேர்ந்த இவர் தன் பாடசாலைக் காலங்களில் பல மேடை நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துக் கொண்டவர். அதைவிட ஒரு சிறந்த சமூக சேவையாளராக தற்போது தன்னை தனது கிராமத்திற்கு ஆர்ப்பணித்துள்ளார்.
கலைஞர் எம்.எஸ்.எம்.றிஸ்வியின் சிபாரிசின் பேரில் மஹ்ரூபின் த ரேட் போய் குறுந்திரைப்படத்தில் நாயகனாக நடித்து சர்வதேச அரங்கில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
அமைதி, அர்ப்பணிப்பு, புலமை, நன்நடத்தை போன்ற பல நற்பண்பாடுகளால் தன் கிராமத்து மக்கள் மத்தியில் நாயகன் ஷனாஸ் சிறந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பதும் மிகையின்றிய சிறப்பம்சமாகும்.
கலைஞர் எம்.எஸ்.எம்.றிஸ்வியின் சிபாரிசின் பேரில் மஹ்ரூபின் த ரேட் போய் குறுந்திரைப்படத்தில் நாயகனாக நடித்து சர்வதேச அரங்கில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
அமைதி, அர்ப்பணிப்பு, புலமை, நன்நடத்தை போன்ற பல நற்பண்பாடுகளால் தன் கிராமத்து மக்கள் மத்தியில் நாயகன் ஷனாஸ் சிறந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பதும் மிகையின்றிய சிறப்பம்சமாகும்.
Subscribe to:
Posts (Atom)
- Hai Wel Come Our Webside.. Coming Soon... THE RATE BOY.. Tamil film.